செய்திகள்,திரையுலகம் ‘வாய் மூடி பேசவும்’ படத்தின் கதை…

‘வாய் மூடி பேசவும்’ படத்தின் கதை…

‘வாய் மூடி பேசவும்’ படத்தின் கதை… post thumbnail image
பனிமலை என்னும் மலை நகரில் ஊமை காய்ச்சல் என்னும் கற்பனை நோய் ஒன்று பரவுகின்றது. அதனால் மக்கள் தங்கள் குரலை இழக்கின்றனர்.உலகில் உள்ள எல்லா பிரச்சினைகளையும் பேசினால் தீர்க்க முடியும் என நம்புபவன் அரவிந்த் (துல்கர் சல்மான்). பேசுவதென்றால் அறவே பிடிக்காதவள் அஞ்சனா (நஸ்ரியா). இந்த ஊமை காய்ச்சலால் இவர்கள் இருவரின் வாழ்கை முற்றிலுமாக மாறுகின்றது.

இப்படத்தின் மையக்கரு இன்றைய தேதியில் மக்கள் யாரும் சரியான முறையில் பேசுவதில்லை, கருத்துகளை சரியாக பரிமாறிகொள்வதில்லை என்ற காரணத்தால் உண்டாகும் தனிநபர் பிரச்சனைகள், சமூக பிரச்சனைகள்மற்றும் அதன் விளைவுகளும்.இதை போல பனிமலையில், தெளிவற்ற பேச்சினால் வரும் பிரச்சனைகளை கொண்ட சில கதாபத்திரங்களின் கதைகளும் இதிரைபடத்தினுள் அடக்கம்.காதலில் சொதப்புவது எப்படி வெற்றிபடத்தை தொடர்ந்து இயக்குனர் பாலாஜிமோகன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் வாயை மூடி பேசவும்.மலையாளம் Megastar மம்மூட்டி அவர்களின் மகன் Dulquer Salmaan தமிழில் அறிமுகமாகும் முதல் படம்.

துல்கர் சல்மான் இப்படத்தில் door to door sales man ஆக நடித்துள்ளார்
துல்கர் நஸ்ரியாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.நஸ்ரியா டாக்டர் ஆக நடித்துள்ளார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு மதுபாலா இப்படத்தில் முக்கியமான கதாபத்திரம் ஏற்று நடித்துள்ளார். இருவர் படத்திற்கு பிறகு மதுபாலா நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடதக்கது.இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராக்கபட்டது. Dulquer salmaan, Nazriya இருவரும் தாங்களே தமிழுக்கு dub செய்துள்ளனர்.பண்டிராஜன்அவர்கள் இப்படத்தில் சுத்தம் சுகாதாரதுறை அமைச்சராக நடித்துள்ளார்.இப்படத்தை புதிய நிறுவனமான Radiance Media வருண்மணியன் மற்றும் Ynot சஷிகாந்த் இனைந்து தயாரித்துள்ளனர்

இயக்குனர் பாலாஜி மோகன் “காதலில் சொதப்புவது எப்படி” படத்திற்கு பிறகு மீண்டும் YNOT studios உடன் இணைத்துள்ளார்.இப்படம் முழுவதுமாக முன்னாரில் படமாக்கபட்டுள்ளது.ஒரே scheduleலில் படம் எடுக்கபட்டது.தொடர்ந்து 55 நாள்களில் படபிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டது.இப்படத்தின் கதை பனிமலை என்னும் கற்பனைமலை பிரதேசத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.முணாரில் இதுவரையாரும் கண்டிடாத புது இடங்களில் படபிடிப்பு நடந்தது.இப்படத்தில் வினுச்சகரவர்த்தி, ரோபோஷங்கர், ஜான்விஜய், சத்யபிரியா, ரமேஷ்திலக், அர்ஜுனன், காளிவெங்கட், RJ பாலாஜி, அபிஷேக், கமலி, இவர்களுடன் படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு Sean Roldan இசைஅமைத்துள்ளார்.Sean Roldanக்கு வாயை மூடி பேசவும் முதல்படம்.ப்படத்திற்கு மாற்றான் புகழ் திரு. சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.மோகன் அவர்கள்கலையும், படத்தொகுப்பை அறிமுக படத்தொகுப்பாளர்
அபிநவ்சுந்தர்நாயக் செய்துள்ளனர்.தென்இந்தியாவின் இரண்டாவது பெரியசிகரமான மீசைபுலிமலையில் பாடல் காட்சிபடமாக்கப்பட்டுள்ளது.

படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் மற்றும் மூன்று 3 theme music tracks இடம் பெற்றுள்ளது.இசையமைப்பாளர் sean Roldan மற்றும் இயக்குனர் பாலாஜி மோகன் இனைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர்.மதன்கார்கி இரண்டு பாடல்களும் முத்தமிழ் இரண்டு பாடல்களும் பாலாஜி மோகன் ஒரு பாடலும் எழுதியுள்ளனர்.இயக்குனர் பாலாஜிமோகன் அவர்கள் இப்படத்தில் செய்திவாசிப்பாளராக நடித்துள்ளார்.இப்படத்தின் பாடல் Mastering சிட்னியில் நடைபெற்றது.Lady Gaga, Rihaana, Shakira போன்றவர்களின் பாடல்களை mastering செய்ததிரு Leon Zervos இப்பட பாடல்களுக்கும் mastering செய்துள்ளார்.இசையமைப்பாளர் இரண்டு பாடல்கள் பாடி உள்ளார்.சக்தி ஸ்ரீ கோபாலன், ஹரிசரண் ,ஆலாப் ராஜு, கல்யாணி நாயர், போன்ற முன்ணணி பாடகர்கள் பாடியுள்ளனர்.இப்படத்தின் ஒலிப்பதிவு Auro 3d தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.படத்தின் ஆடியோ உரிமையை Think music வாங்கியுள்ளது.இந்த கோடை விடுமுறைக்கு படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
படபிடிப்பு முடிந்த நிலையில் Post Production பணி வேகமாக நடந்து வருகின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி