அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஆம் ஆத்மி கட்சிக்கு நிதி நெருக்கடி!…

ஆம் ஆத்மி கட்சிக்கு நிதி நெருக்கடி!…

ஆம் ஆத்மி கட்சிக்கு நிதி நெருக்கடி!… post thumbnail image
அகமதாபாத்:-காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு சவால் விடும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி திகழ்கிறது.ஆனால் அந்த கட்சிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரம் செய்யும் வகையில் அந்த கட்சிக்கு பண வலிமை இல்லை. மக்களின் நன்கொடை மூலம் கட்சியை நடத்தி வரும் ஆம் ஆத்மி பிரசாரத்திற்கு பணம் இல்லாமல் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

குஜராத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளை போல பிரமாண்ட அளவுக்கு ஆம் ஆத்மியால் தேர்தலில் விளம்பரம் செய்ய முடியவில்லை. போஸ்டர் அடித்து பிரசாரம் செய்வதிலும் பின் தங்கி காணப்படுகிறது.இதனால் அந்த கட்சி வீதி வீதியாக சென்று ஓட்டு வேட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து குஜராத் மாநில ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் சுக்தேவ் பட்டேல் கூறியதாவது:–ஆம் ஆத்மியை சேர்ந்த எங்களிடம் போதிய அளவு நிதி இல்லை. இதனால் மிகப் பெரிய அளவில் எங்களால் தேர்தல் பிரசாரம் செய்ய இயலாது சாதாரண அளவில்தான் பிரசாரம் இருக்கும்.

அடுத்த வாரத்தில் இருந்து நாங்கள் வீதிவீதியாக சென்று ஆதரவு திரட்ட உள்ளோம்.பெரிய கட்சிகளை போல எங்களால் டி.வி. மற்றும் பத்திரிகையில் தேர்தல் விளம்பரம் கொடுக்க இயலாது. எங்களது இளைஞர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ஓட்டு சேகரிப்பார்கள்.டெல்லியில் நாங்கள் செய்த பிரசார உத்தியை குஜராத்திலும் கடைபிடிப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி