செய்திகள் மாயமான மலேசிய விமானம் கடத்தலா?…

மாயமான மலேசிய விமானம் கடத்தலா?…

மாயமான மலேசிய விமானம் கடத்தலா?… post thumbnail image
கோலாலம்பூர்:-239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச்.370 விமானம் கடந்த வாரம் மலேசியா- வியட்நாம் பகுதியில் காணாமல் போனது. இவ்விமானம் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வரவில்லை. எனவே உலகின் அனைத்து பகுதிகளிலும் விமானம் தீவிரமாக தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோலாலம்பூரில் இன்று மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் “காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் 14 நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை இப்பணியில் 42 கப்பல்கள், 39 விமானங்கள் ஈடுபட்டுள்ளன. எங்களது நாட்டின் வேண்டுகோளை ஏற்று விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.விமானம் கப்பல் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த தென் சீன கடல் பகுதியில் முதலில் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் விமானம் கிடைக்காததால், அந்தமான் வரை தேடுதல் பரப்பை விரிவுபடுத்தியுள்ளோம்.

ஆனால் விமானத்தை யாரேனும் கடத்தியிருக்கலாம் என்றும் அதன் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டை ஒருவர் துண்டித்து இருக்கலாம் என்றும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதை அடிப்படையாக வைத்தே, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே இதனடிப்படையிலும் விசாரணை மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதனால் விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏதும் ஏற்படவில்லை. இடைவிடாமல் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்கள் மீது அக்கறையும் அன்பும் வைத்துள்ளோம். தென்சீனாவில் விமானத்தை தேடும் பணி முழுமையடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி