செய்திகள்,திரையுலகம் சீட்டுக்கம்பெனி நடத்தி பலகோடி ரூபாயை சுருட்டிய நடிகை!…

சீட்டுக்கம்பெனி நடத்தி பலகோடி ரூபாயை சுருட்டிய நடிகை!…

சீட்டுக்கம்பெனி நடத்தி பலகோடி ரூபாயை சுருட்டிய நடிகை!… post thumbnail image
ஆந்திரா:-தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களான Devatha, Varudhuni Parinayam, Swathi Chinukulu ஆகிய சீரியல்களில் நடித்துள்ள நடிகை விஜயராணி, கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நியூ சாஸ்திரி நகர் என்ற பகுதியில் வசித்து வந்தார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவர் நடிகை என்பதால் மிகவும் பாசத்துடன் பழகினர்.இதைவைத்து ரூ.5 லட்சம் முதல் ரூ.50 வரையிலான மதிப்பில் சீட்டுக்களை அவர் நடத்தி வந்தார். கடந்த சில வருடங்களாக வெற்றிகரமாக சீட்டுக்கம்பெனியை நடத்தி வந்த விஜயராணி, திடீரென நேற்று இரவுமுதல் தலைமறைவானார்.

அவர் சுமார் ரூ.10 கோடி வரை மோசடி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவரிடம் சீட்டு போட்டு ஏமாந்த பலர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். புகார்கள் குவிந்துகொண்டே போவதால் அதிர்ச்சியடைந்த போலீஸார், விஜயராணியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி