செய்திகள் மலேசிய விமானம் மாயமான பின்னரும் 4 மணிநேரம் பறந்தது!…பத்திரிகை செய்தியால் பரபரப்பு…

மலேசிய விமானம் மாயமான பின்னரும் 4 மணிநேரம் பறந்தது!…பத்திரிகை செய்தியால் பரபரப்பு…

மலேசிய விமானம் மாயமான பின்னரும் 4 மணிநேரம் பறந்தது!…பத்திரிகை செய்தியால் பரபரப்பு… post thumbnail image
மலேசியா:-மாயமான மலேசிய விமானம் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை துண்டித்த பிறகும் நான்கு மணிநேரம் பறந்துள்ளது என்று தற்போது கிடைத்துள்ள செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இதனால் பெரும் பதட்டம் உண்டாகியுள்ளது.

விமானம் விபத்து ஏற்பட்டு நொறுங்கி விழுந்திருந்தால் அதன் பாகங்கள் கடலில் சிதறியிருக்கும். அப்படி எந்த தடயமும் கிடைக்காததால், மாயமான விமானம் கடத்தப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மாயமான மலேசிய விமானம், விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னர் 4 மணி நேரம் வானில் பறந்ததாக விமான என்ஜின் குறித்து பதிவான தகவல் ஒன்று உறுதியாக தெரிவிக்கின்றது,.

மலேசிய விமானத்தின் என்ஜினின் செயல்படும் விவரம் விவரங்கள் தாமாகவே டவுன் லோட் ஆகி, அதற்கென உள்ள டேட்டா சென்டரில் பதிவு ஆகியுள்ளதாகவும், அதன் அடிப்படையில், அந்த விமானத்தின் என்ஜின், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த பின்னும் நான்கு மணி நேரம் உறுதியாக பறந்துள்ளது என்றும் அமெரிக்க விமான போக்குவரத்து புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் அடித்து கூறுகின்றனர். இதனால் இந்த விமானத்தை கடத்தி சென்றிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ஆனால் அமெரிக்க விமான போக்குவரத்து புலனாய்வாளர்களின் இந்த தகவலை மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசேன் மறுத்துள்ளார். இந்த தகவலில் உண்மையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி