நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீசார், 6 பேரை கைது செய்தனர். இவர்களில் ஒரு குற்றவாளி திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். சிறுவன் என்பதால் மற்றொரு குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதர குற்றவாளிகளான முகேஷ், அக்சய் குமார், வினய் சர்மா, மற்றும் பவன் ஆகியோருக்கு கடந்த செப்டம்பர் 13-ம் தேதி விரைவு நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை மாற்ற வேண்டும் எனக் கோரி 4 பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் அவர்களை தவறாக சிக்க வைத்துவிட்டதாக அவர்களின் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால், அவர்களின் வாதத்தை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி