செய்திகள்,திரையுலகம் ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமான நடிகையால் பரபரப்பு!…

ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமான நடிகையால் பரபரப்பு!…

ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமான நடிகையால் பரபரப்பு!… post thumbnail image
சென்னை:-விமல், ப்ரியாஆனந்த், சூரி நடிக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி படத்தின் படப்பிடிப்பு நேற்று மயிலாடுதுறையில் நடந்தது. மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷன் அருகே படப்பிடிப்பு நடந்தபோது படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க பெருங்கூட்டம் கூடிவிட்டது. வேடிக்கை பார்க்கும் மக்களின் கூட்டம் சுமார் ஒரு லட்சத்தை தாண்டியதால் படக்குழுவினர்களால் ஒருசில ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது திடீரென ஒரு கும்பல் படப்பிடிப்பு நடக்கும் பகுதிக்குள் நுழைந்து ப்ரியா ஆனந்திடம் ஆட்டோகிராப் வாங்கினர். அவர் ஆட்டோகிராபில் கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருசில அத்துமீறி ப்ரியா ஆனந்தின் கையை பிடித்து இழுத்தனர். இன்னும் சிலர் அவருடைய இடுப்பை கிள்ளினர். நிலைமை விபரீதமாக செல்வதை கண்ட படக்குழுவினர் உடனடியாக காவல்துறையினர்களுக்கு தகவல் கொடுத்து ப்ரியா ஆனந்தை ரசிகர்களின் கூட்டத்தின் இருந்து விடுவித்தனர். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு தொடர்ந்தது. ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கின்றார். விமல்,சூரி, ப்ரியா ஆனந்த், நாசர், தம்பி ராமையா, சிங்கமுத்து ஆகியோர் நடிக்கும் இந்த படத்தினை ஆர்.கண்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை ஆகிய படங்களை இயக்கியவர். டி.இமான் இசையமைக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி