செய்திகள்,திரையுலகம் 27 வருட பகையை மறந்து ஒன்றாக நடிக்கும் நடிகைகள்!…

27 வருட பகையை மறந்து ஒன்றாக நடிக்கும் நடிகைகள்!…

27 வருட பகையை மறந்து ஒன்றாக நடிக்கும் நடிகைகள்!… post thumbnail image
மும்பை:-1980-90களில் இந்திப் பட உலகை கலக்கியவர்கள் மாதுரி தீட்ஷித்தும், ஜூஹி சால்வாவும். இருவருக்கும்தான் அப்போது கடும் போட்டி. இவர் வாய்ப்பை அவர் தட்டிப் பறிப்பார். அவர் வாய்ப்பை இவர் தட்டிப் பறிப்பார். அவர் ஒரு ஹீரோவுடன் நடித்தால் அதே ஹீரோவுடன் இவர் நடிப்பார். பொது நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துக் கொண்டால்கூட பேசிக்கொள்ள மாட்டார்கள்.

அந்த அளவுக்கு இருவரும் சினிமாவிலும், சொந்த வாழ்க்கையிலும் பகைமை கொண்டவர்கள். இப்போது இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் வந்து விட்டார்கள். கிட்டதட்ட 27 வருடங்களுக்கு பிறகு இருவரையும் இணைந்து நடிக்க வைத்திருக்கிறார் சவுமிக் சென். அதிலும் ஹீரோயின், வில்லியாக.வட இந்தியாவின் சில பகுதிகளில் உழைக்கும் அடித்தட்டு பெண்கள் மீது மேல்தட்டு மக்கள் பாலியல் வன்முறை உள்ளிட்ட வன்முறைகளை அடிக்கடி காட்டுவார்கள். இதைத் தடுக்க கீழ்மட்டத்து பெண்கள் இணைந்த உருவாக்கிய ஆயுதம் தாங்கிய அமைப்புதான் குலாப் கேங்.

இதைத்தான் சவுமிக் சென் படமாக இயக்கி இருக்கிறார். இதில் மாதுரி தீட்சித் குலாப் கேங் லீடராகவும், ஜூஹி சால்வா மேல்தட்டு மக்களின் பிரதிநிதியாகவும் நடித்திருக்கிறார். மாதுரி தீட்சித், ஜூஹி சால்வா இணைந்து கலக்கும் என்ற விளம்பரத்தோடு படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். படமும் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி