அரசியல்,செய்திகள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு புகார்…

காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு புகார்…

காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு புகார்… post thumbnail image
திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் கண்ணூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அப்துல்லா குட்டி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், திருவனந்தபுரம் ஓட்டலில் வைத்து தன்னை கற்பழித்ததாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாதென்று மந்திரி மிரட்டியதாகவும் அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அப்துல்லா குட்டி, “எனது புகழையும், கட்சியின் புகழையும் கெடுக்க எந்த காரணமும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து சரியான நேரத்தில் விளக்கம் அளிப்பேன்” என்று தெரிவித்தார்.

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திய சோலார் பேனல் முறைகேட்டில் இந்த பெண்ணுக்கு தொடர்புள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி