அரசியல்,செய்திகள் உயிரோடு இருப்பவர்களுக்கு அஞ்சலி தெரிவித்த கெஜ்ரிவால்!…

உயிரோடு இருப்பவர்களுக்கு அஞ்சலி தெரிவித்த கெஜ்ரிவால்!…

உயிரோடு இருப்பவர்களுக்கு அஞ்சலி தெரிவித்த கெஜ்ரிவால்!… post thumbnail image
அகமதாபாத்:-மோடியின் ஆட்சியில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடிக்க குஜராத்தில் 4 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து வந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 8-ம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது, நாட்டில் பெருகி வரும் ஊழலை சுட்டிக்காட்டி பேசிய அவர், குஜராத்தில் ஊழலை எதிர்த்து போராடி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அவற்றை அம்பலப்படுத்த முயன்ற பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறினார். உதாரணத்துக்கு 4 பெயர்களை குறிப்பிட்ட கெஜ்ரிவால், பொது நோக்கத்துக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த இவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அந்த நால்வரின் ஆன்மாக்களும் சாந்தியடைய வேண்டிக் கொள்வதாக கூறினார்.

ஆனால், அந்த கூட்டத்தில் கெஜ்ரிவால் குறிப்பிட்ட 4 பெயர் கொண்ட பட்டியலில் ஒருவர் மட்டும் கடந்த 2010-ம் ஆண்டு குஜராத் ஐகோர்ட் வாசலில் கொல்லப்பட்டார். மீதி 3 பேரும் தாக்குதல்களுக்கு பிறகு சிகிச்சை பெற்று உயிருடன் வாழ்ந்து வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.உயிருடன் இருப்பவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கெஜ்ரிவாலின் அரைவேக்காட்டு அரசியலை குஜராத் மாநில பா.ஜ.க.வினர் கேலி செய்து பேசி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி