செய்திகள்,திரையுலகம் தம்பி ராமைய்யா உயிரை காப்பாற்றிய காமெடி நடிகர்!…

தம்பி ராமைய்யா உயிரை காப்பாற்றிய காமெடி நடிகர்!…

தம்பி ராமைய்யா உயிரை காப்பாற்றிய காமெடி நடிகர்!… post thumbnail image
சென்னை:-விமல், ப்ரியா ஆனந்த், தம்பி ராமைய்யா, சூரி நடிக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆந்திரா அருகே உள்ள ஏரியில் நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் நேற்று காலை படப்பிடிப்பு தளத்திற்கு காரில் விமல், ப்ரியா ஆனந்த், சூரி மற்றும் தம்பி ராமைய்யா ஆகியோர் வந்தனர். கார் ஏரியின் மிக அருகின் நின்றதும் டிரைவர் கிழே இறங்கி காரின் டயரில் காற்று சரியாக இருக்கின்றதா என செக்கப் செய்துகொண்டிருந்தார். காரில் இருந்து தம்பி ராமைய்யாவை தவிர எல்லோரும் இறங்கிவிட்டனர். இந்நிலையில் திடீரென கார் டிரைவர் இல்லாமல் ஏரியை நோக்கி நகர்ந்தது.

காரின் உள்ளே இருந்த தம்பிராமைய்யா, சீட் பெல்ட்டை கூட கழட்டாமல் இருந்த நிலையில் கார் திடீரென ஏரியை நோக்கி நகரதொடங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை தற்செயலாக கவனித்த சூரி, உடனடியாக ஒரு பெரிய கல்லை எடுத்து காரின் சக்கரத்தின் அருகே போட்டு காரை தடுத்தி நிறுத்தினார். இதனால் கார் நின்றது. சூரி மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால், கார் ஏரியின் உள்ளே விழுந்திருக்கும்.ராமையாவின் உயிரை நூலிழையில் காப்பாற்றிய சூரியை படக்குழுவினர் அனைவரும் பாராட்டினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி