செய்திகள்,திரையுலகம் ஹன்சிகாவுக்கு நெருக்கமானவரின் திடீர் மரணத்தால் பரபரப்பு!…

ஹன்சிகாவுக்கு நெருக்கமானவரின் திடீர் மரணத்தால் பரபரப்பு!…

ஹன்சிகாவுக்கு நெருக்கமானவரின் திடீர் மரணத்தால் பரபரப்பு!… post thumbnail image
சென்னை:-மும்பையை சேர்ந்த நடிகை ஹன்சிகா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மிகவும் பிசியான நடிகையாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவருக்கு மிக நெருக்கமான, பிரியமான பாட்டி இறந்துவிட்டதாக வந்த தகவலை அடுத்து தனது பிசியான படப்பிடிப்புகளை இரண்டு நாட்கள் ரத்து செய்துவிட்டு, மும்பைக்கு பறந்துவிட்டார். இதனால் அவர் நடித்துக்கொண்டிருக்கும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படன.

மும்பையில் வாழ்ந்து வந்த ஹன்சிகாவின் 81 வயது பாட்டி, நல்ல உடல்நலத்துடன் தான் இருந்தாராம். நேற்று மாலை திடீரென நெஞ்சு வலி என்று கூறியதால் அவருடைய உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சைக்கு பலனின்றி நேற்று இரவு மரணம் அடைந்தார். ஹன்சிகா மீது அவரது பாட்டி அளவுகடந்த பாசம் வைத்திருந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.

ஹன்சிகாவின் சென்னை மற்றும் மும்பை தோழிகள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஹன்சிகா இன்று மும்பையில் நடக்கும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டுவிட்டு, நாளை மறுநாள் சென்னை திரும்புவார் என்று அவரது மேலாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி