செய்திகள்,திரையுலகம் சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடித்தார் நயன்தாரா!…

சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடித்தார் நயன்தாரா!…

சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடித்தார் நயன்தாரா!… post thumbnail image
சென்னை:-இந்தியில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ‘கஹானி’ படம் தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தியில் வித்யாபாலன் நடித்த வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்காக ஒரு சண்டைக்காட்சியில் நயன்தாரா டூப் போடாமல் நடித்துள்ளாராம்.இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா கூறும்போது,

இந்த படத்தில் ஒரு முக்கியமான, உணர்ச்சிகரமான காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது நயன்தாராவின் கை விரல் நகங்களை நான் கவனித்தேன். அவை மிகவும் நேர்த்தியாக, அழகாக, நீளமாக இருந்தது. ஆனால் அந்த காட்சியில் அவரது நகங்கள் அவ்வளவு இருக்கக்கூடாது. இதை நயன்தாராவிடம் கூறினேன். அடுத்த சில வினாடிகளிலேயே அவர் தன்னுடைய நகங்களை நறுக்கிவிட்டு அந்த காட்சியில் நடித்துக் கொடுத்தார். இந்த செயல் அவர் மேல் இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது.

மேலும், இந்த படத்தில் வரும் ஒரு சண்டைக் காட்சிக்காக அவருக்கு பதிலாக டூப் போட்டு படமாக்கலாம் என இருந்தேன். ஆனால் நயன்தாரா இதை நான் தான் செய்வேன் என்று அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் சொல்லிவிட்டு நடித்தார். அந்த காட்சியில் அவரது கடின உழைப்பின் பலன் நன்றாகவே தெரிந்தது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி