செய்திகள்,திரையுலகம் விஜய் – தனுஷ் மோதலால் பரபரப்பு!…

விஜய் – தனுஷ் மோதலால் பரபரப்பு!…

விஜய் – தனுஷ் மோதலால் பரபரப்பு!… post thumbnail image
சென்னை:-கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி கன்னட திரையுலகில் ‘உக்ரம்’ என்ற படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஸ்ரீமுரளி மற்றும் ஹரிப்பிரியா நடித்துள்ளனர். இந்த படம் எதிர்பார்த்ததை விட மிகப்பிரமாதமான கலெக்ஷனை கர்நாடகம் முழுவதும் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. இந்த மாபெரும் வெற்றிப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய கடும்போட்டி ஏற்பட்டுள்ளது.

தனுஷ் இந்த படத்தின் டிரைலரை பார்த்து மிகவும் ஆர்வமாகி இந்த படத்தின் தமிழ் உரிமையை வாங்குவதற்கு தயாரிப்பாளரிடம் பேசி வந்தார். பேரம் முடிவடையும் சூழ்நிலையில் திடீரென விஜய் தனக்கு அந்த படத்தின் ரீமேக் கொடுக்குமாறும், தனுஷை விட அதிக தொகை தருவதாகவும் கூறியதால் உக்ரம் படத்தின் தயாரிப்பாளர் தனுஷுக்கு ரீமேக் உரிமையை கொடுப்பதில் திடீரென பின்வாங்கி உள்ளார். இதனால் தனுஷ் விஜய் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த படத்தின் உரிமையை வாங்குவதற்கு தனுஷும், விஜய்யும் மோதுவதை பார்த்து கன்னட படவுலகம் அதிர்ச்சியில் உள்ளது.முழுக்க முழ்க்க கோலார் தங்க வயலில் தயாரிக்கபட்ட அதிரடி ஆக்ஷன் படமான உக்ரம் கன்னடத்திரையுலகில் ஒரு பெரும் புரட்சியையே செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் திரைக்கதையை மட்டும் மூன்று வருடங்கள் தயார் செய்ததாக இயக்குனர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி