செய்திகள்,திரையுலகம் மீண்டும் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் அஜித்!…

மீண்டும் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் அஜித்!…

மீண்டும் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் அஜித்!… post thumbnail image
சென்னை:-கடந்த தேர்தலின் போது அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது போல் தனது ரசிகர்களுக்கும் ஒரு அதிர்ச்சியை அணுகுண்டாக தூக்கி வீசினார் அஜித். ஒரே இரவில் தனது அனைத்து ரசிகர் மன்றங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டார் இவர்.

இருந்தாலும் அவரது ரசிகர்கள் ஒவ்வொரு முறை அவரது படம் வெளியாகும் நேரத்தில் பேனர் அடித்து, பால் அபிஷேகம் நடத்தி திரையரங்கை திருவிழா அரங்காக மாற்றி விடுகிறார்கள். இதனால் தற்போது அஜித் மனதில் ஒரு நெருடல் ஏற்பட்டுள்ளதாம், அதாவது ரசிகர் மன்றத்தை கலைத்தும் என்னை விட்டு இந்த கூட்டம் விலகியதாக தெரியவில்லை, என் மேல் இவ்வளவு அன்பும், உயிரும் வைத்திருக்கும் இவர்களுக்காக மீண்டும் ரசிகர் மன்றத்தை நடத்தும்படி சொல்லவிருக்கிறாராம்… ஆனால் இதற்கு பல கண்டிஷன்ஸ் அப்ளை என்றும் கூறுகிறாராம்,

அதாவது மீண்டும் ரசிகர் மன்றம் திறந்தால் நற்பணியை மட்டுமே செய்யவேண்டும், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்க கூடாது. அரசியல் கட்சியுடன் என் கொடி எங்கேயும் பறக்க கூடாது என்று கூறுகிறாராம். இவரு சொல்றதும் ஒரு நியாயம் தானே ரசிகர்களே கொஞ்சம் யோசிங்க….!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி