செய்திகள்,திரையுலகம் மீண்டும் ஒளிப்பதிவாளராகும் ‘கோலி சோடா’ இயக்குனர் விஜய் மில்டன்!…

மீண்டும் ஒளிப்பதிவாளராகும் ‘கோலி சோடா’ இயக்குனர் விஜய் மில்டன்!…

மீண்டும் ஒளிப்பதிவாளராகும் ‘கோலி சோடா’ இயக்குனர் விஜய் மில்டன்!… post thumbnail image
சென்னை:-கோலிசோடாவின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் விஜய் மில்டன் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். கோலி சோடா பார்ட் 2 என்று அழைக்கப்படும் இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதை தயார் நிலையில் இருக்கின்றது.

இந்நிலையில் விஜய் மில்டன் தனது ஆஸ்தான இயக்குனர் பாலாஜி சக்திவேலின் வேண்டுகோளுக்கு இணங்கி அவரது அடுத்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளாராம்.ஏற்கனவே பாலாஜி சக்திவேலின் காதல் மற்றும் வழக்கு எண் 18/9 போன்ற படங்களுக்கு விஜய் மில்டன் தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனராக வெற்றி பெற்றாலும், எனது ஆஸ்தான இயக்குனருக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிவதில் பெருமை அடைவதாக விஜய் மில்டன் கூறினார்.
பாலாஜி சக்திவேலின் அடுத்த படத்தை லிங்குசாமி தயாரிக்கிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த படம் அடுத்த மாதம் தொடங்க இருக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி