அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு : ஏப்.7ம் தேதி முதல் 9 கட்டமாக தேர்தல் நடக்கிறது…

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு : ஏப்.7ம் தேதி முதல் 9 கட்டமாக தேர்தல் நடக்கிறது…

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு : ஏப்.7ம் தேதி முதல் 9 கட்டமாக தேர்தல் நடக்கிறது… post thumbnail image
புதுடெல்லி:-தற்போதைய 15-வது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற ஜூன் 1-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே மே 31-ந்தேதிக்குள் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட வேண்டும். இதனால் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக உள்ளது. தேர்தல் பணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊழியர்களை அழைத்துச்செல்வது போன்ற பிரச்சினைகளை கருத்தில் கொண்டு எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது என்பது பற்றி தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஆலோசித்து வந்தனர்.

இதுதொடர்பான பணிகள் முடிவடைந்து விட்டதால், பாராளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.டெல்லி விஞ்ஞான பவனில் இன்று நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் பாராளுமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் அறித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

16-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7-ந்தேதி தொடங்குகிறது. 9 கட்டமாக தேர்தல் நடைபெறும். கடைசி கட்ட தேர்தல் மே-12-ந்தேதி நடக்கிறது.
தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 24-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.மே 16-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி