செய்திகள் குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…

குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…

குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு… post thumbnail image
சென்னை:-டி.என்.பி.எஸ்.சி தலைவர் நவநீத கிருஷ்ணன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்தார்.

தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 24-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கும் என்றும், இதற்காக இடஒக்கீட்டு பிரிவு மற்றும் சிறப்பு பிரிவின் கீழ் தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

காலியாக இருக்கும் 5855 குரூப்-4 பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி