செய்திகள்,திரையுலகம் குடிபோதையில் நடிகையை மிரட்டிய நடிகர்!…

குடிபோதையில் நடிகையை மிரட்டிய நடிகர்!…

குடிபோதையில் நடிகையை மிரட்டிய நடிகர்!… post thumbnail image
மும்பை:-தீராத விளையாட்டுப்பிள்ளை, ஆதிபகவன், போன்ற படங்களில் நடித்த நடிகை நீதுசந்திரா, பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகர் குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை அளித்துள்ளார். இதனால் தெலுங்கு படவுலகே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் கடந்த சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு படப்பிடிப்பில் குடிபோதையில் துப்பாக்கியை எடுத்து வந்து சக நடிகர்களையும் என்னையும் மிரட்டினார். உலகில் வேறு எங்குமே ஒரு கதாநாயகன் இவ்வளவு கேவலமாக நடந்தது இல்லை. ஆனால் ராஜசேகர் இந்த அளவுக்கு அத்துமீறி நடந்ததை படப்பிடிப்பில் இருந்த யாருமே தட்டிக்கேட்கவில்லை.இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகியும் யாரும் இன்னும் இதை வெளியில் கூட சொல்லாமல் மூடி மறைத்துவிட்டனர். ஆனால் நான் தைரியமாக ராஜசேகரின் அத்துமீறலை வெளிப்படுத்தியுள்ளேன் என்று நீது சந்திரா தனது டுவிட்டரில் கூறியிருக்கிறார்.

டாக்டர் ராஜசேகரும், நீது சந்திராவும் கடந்த 2009ஆம் ஆண்டு சத்யமேவ ஜெயதே என்ற படத்தில் ஒன்றாக நடித்தனர். அந்த படத்தின் படப்பிடிப்பில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கவேண்டும் என கூறப்படுகிறது.நீதி சந்திராவின் டுவிட்டர் செய்தி தெலுங்கு படவுலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி