செய்திகள்,திரையுலகம் எழுத்தாளர் ஜெயமோகனுடன் சேரும் கமல்!…

எழுத்தாளர் ஜெயமோகனுடன் சேரும் கமல்!…

எழுத்தாளர் ஜெயமோகனுடன் சேரும் கமல்!… post thumbnail image
சென்னை:-மோகன்லால்,மீனா நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளிவந்த த்ரிஷ்யம் என்ற மாபெரும் வெற்றிப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.

தற்போது உத்தம வில்லன் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கும் கமல், உத்தம வில்லன் படத்தை அடுத்து த்ரிஷ்யம் ரீமேக் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.இந்நிலையில் இந்த படத்தின் வசனங்களை எழுதும் பொறுப்பை கமல், எழுத்தாளர் ஜெயமோகனிடம் கொடுத்துள்ளார்.நாகர்கோவிலை சொந்த ஊராக கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன் ஏற்கனவே கடல், நான் கடவுள் மற்றும் அங்காடி தெரு ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடல் படத்தில் மீனவக்கரையோர மக்களின் வசனங்களை எழுதி பெரும் புகழ்பெற்றவர் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜெயமோகன் ரப்பர், விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், காடு, அனல் காற்று, உலோகம் போன்ற புகழ்மிகுந்த நாவல்களையும் எழுதியவர்.
இயக்குனர் ஜீத்து ஜோசப்புடன் இணைந்து த்ரிஷ்யம் ரீமேக் படத்திற்கு வசனம் எழுதுமாறு கமல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்த படத்தின் வசனகர்த்தா பணிபுரிய எழுத்தாளர் ஜெயமோகன் சம்மதித்து உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி