செய்திகள்,திரையுலகம் ஆஸ்கார் விருது வெகு தூரத்தில் இல்லை!…நடிகையின் நம்பிக்கை…

ஆஸ்கார் விருது வெகு தூரத்தில் இல்லை!…நடிகையின் நம்பிக்கை…

ஆஸ்கார் விருது வெகு தூரத்தில் இல்லை!…நடிகையின் நம்பிக்கை… post thumbnail image
மும்பை:-ஆஸ்திரேலியவின் மெல்போர்னில் வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் 11 வரை நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவுக்கான படங்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கான இந்திய திரைப்பட உலகின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை வித்யா பாலன் திரைப்பட விழாவில் பங்கேற்கும் இந்திய படங்களின் பெயர்களை இந்நிகழ்ச்சியில் அறிவித்தார்.அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வித்யா பாலன், ‘எனது நடிப்பில் சமீபத்தில் வெளியான ’ஷாதி கே சைட் எஃபெக்ட்ஸ்’ படத்துக்கு ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. ஆரம்பம் முதல் ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு பிரமிக்கத் தக்கது.

ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதையே நான் விரும்புகிறேன். ஆஸ்கார் விருதை வாங்க வேண்டும் என்று நான் நினைத்துப் பார்த்ததே கிடையாது. அதேபோல், பத்மஸ்ரீ விருது வாங்குவேன் என்றும் நினைத்துப் பார்த்ததே கிடையாது.ஆனால், கடவுளின் தயவால் பத்மஸ்ரீ விருது எனக்கு கிடைத்தது. இதேபோல், ஆஸ்கார் விருது வாங்கும் நாளும் இன்னும் அதிக தூரத்தில் இல்லை’ என்று கூறினார்.அரசியலில் இறங்கும் நோக்கம் ஏதும் உள்ளதா? என்ற நிருபரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், அப்படி ஏதும் திட்டமில்லை என்று கூறி மறுத்து விட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி