ஆனால் சில நாட்களிலேயே அவரை அப்பட இயக்குனர் வேணு நீக்கிவிட்டு வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தார். அதன்படி ரீமாவுக்கு பதிலாக அபர்ணா கோபிநாத் தேர்வு செய்யப்பட்டார். மம்மூட்டி படத்திலிருந்து நீக்கப்பட்டதால் ரீமா கல்லிங்கல் சோகத்துடன் இருந்தாராம். வீட்டில் இருக்கும்போது அதையே அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டாராம். இதனால் கணவர் ஆஷிக் அபுவும் அப்செட் ஆகிவிட்டார். மனைவியின் மனம் நோகக்கூடாது என்பதற்காக தான் இயக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க அவரை தேர்வு செய்துவிட்டார்.
இதை தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ள இயக்குனர், ‘நான் இயக்கும் அடுத்த படத்தில் ரீமா கல்லிங்கல் ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். ஆஷிக் இயக்கிய ‘22 பிமேல் கோட்டயம் என்ற படத்தில் ரீமா நடித்தபோதுதான் அவருடன் காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி