செய்திகள்,திரையுலகம் பொருத்தமான பெண் கிடைத்ததால் உடனே திருமணம்…நடிகர் ஆர்யா பேட்டி!…

பொருத்தமான பெண் கிடைத்ததால் உடனே திருமணம்…நடிகர் ஆர்யா பேட்டி!…

பொருத்தமான பெண் கிடைத்ததால் உடனே திருமணம்…நடிகர் ஆர்யா பேட்டி!… post thumbnail image
சென்னை:-நடிகர் ஆர்யா தமிழ் படங்களில் பிசியாக உள்ளார். கடந்த வருடம் ராஜாராணி, சேட்டை, ஆரம்பம், இரண்டாம் உலகம் படங்கள் வெளி வந்தன. தற்போது மீகாமன், புறம்போக்கு படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே தனக்கு ஜோடியாக நடித்த நடிகைகளுடன் ஆர்யா இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

ராஜாராணி படத்தில் தன்னுடன் நடித்த நயன்தாராவை காதலிப்பதாக கூறப்பட்டது. அவரை வீட்டுக்கு அழைத்து ‘கேக்’ வெட்ட வைத்து பிரியாணி விருந்து கொடுத்ததாகவும் செய்தி வெளியானது.அதன் பிறகு இரண்டாம் உலகம் படத்தில் ஜோடியாக நடித்த அனுஷ்காவை காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. சேட்டை படத்தில் தன்னுடன் நடித்த ஹன்சிகா மோத்வானியை காதலிக்கிறார் என்றும் கிசுகிசுக்கள் வந்தன. இதற்கு ஆர்யா பதில் அளித்துள்ளார்.அவர் கூறியதாவது:–

என்னைப் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகின்றன. அதுபற்றி கவலைப்படவில்லை. இது போல் கிசுகிசுக்கள் வந்தால்தான் பிரபலமாக இருக்கிறோம் என்று அர்த்தம். நான் யாரையும் காதலிக்கவில்லை. நான் விரும்பும் பெண்ணை இதுவரை சந்திக்கவில்லை. அப்படிப்பட்ட பொருத்தமான பெண் கிடைத்ததும் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன்.இவ்வாறு ஆர்யா கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி