செய்திகள்,திரையுலகம் ‘வேங்கை புலி’ படத்தின் கதை!…

‘வேங்கை புலி’ படத்தின் கதை!…

‘வேங்கை புலி’ படத்தின் கதை!… post thumbnail image
சென்னை:-மழை படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இவர் டோலிவுட்டில் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘வான்டட்‘ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இப்படம் தமிழில் வேங்கை புலி என்ற பெயரில் திரைக்கு வருகிறது. அவருக்கு ஜோடியாக தீக்க்ஷா சேத் நடிக்கிறார். நாசர், பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சக்ரி இசை. எஸ்.ஜிஆர்.பிரசாத், கோவை வேல்முருகன் தயாரிப்பு. பி.வி.எஸ்.ரவி இயக்கி உள்ளார்.

பெற்றோர் சம்பாதித்த பணத்தில் ஜாலியாக வாழ்வதுதான் வாழ்க்கை என்று எண்ணும் கோபிசந்த், தீக்ஷா மீது காதல் கொள்கிறார். அந்த காதலுக்காக சிலரை கொல்கிறார். அவர் எப்படி பிரச்னைகளிலிருந்து மீள்கிறார் என்பதுதான் கதை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி