செய்திகள்,திரையுலகம் விருப்பமில்லாமல் கவர்ச்சி நடனம் ஆடுவதாக புலம்பும் நடிகை!…

விருப்பமில்லாமல் கவர்ச்சி நடனம் ஆடுவதாக புலம்பும் நடிகை!…

விருப்பமில்லாமல் கவர்ச்சி நடனம் ஆடுவதாக புலம்பும் நடிகை!… post thumbnail image
சென்னை:-ரேணி குண்டா, கோ, ரெண்டாவது படம், அமளி துமளி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை சஞ்சனா சிங் அவர் கூறியதாவது: சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறேன். நடிகை ஆகும் ஆசையில் நான் கஷ்டப்பட்டுதான் வந்தேன்.

எனக்கு நல்ல மேனேஜர் அமையாமல் இருந்ததும் அதற்கு காரணம். இப்போதுள்ளவர் என் வளர்ச்சியை கருத்தில் கொண்டிருப்பதுடன் தமிழ் பேசவும் கற்றுத் தருகிறார். ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. பணத்துக்காக கவர்ச்சியாக ஆடுகிறேன். அது எனக்கு பிடிக்கவிலை. விருப்பமில்லாமல் செய்யும் குத்தாட்டம் ஆடும் கேரக்டர்களுக்கு புஃல் ஸ்டாப் வைக்கவே ஆசைப்படுகிறேன்.
இன்னும் சொல்லப்போனால் 2வது ஹீரோயினாகவாவது நடிக்க வேண்டும். அதற்கான முயற்சி எடுத்துக்கொண்டே வருகிறேன். தொடக்கத்தில் ஒல்லியான தோற்றத்தில் இருந்தேன். ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு சற்று பூசினார் போன்ற உடல் உள்ள நடிகைகளைத்தான் பிடிக்கிறது.

அதற்காக இப்போது குண்டாகி இருக்கிறேன். ஆக்ஷன் வேடங்களிலும் நடிக்க ஆசை, என்னைப் பொருத்தவரை பாலிவுட்டில் நடிகர், நடிகைகள் டேட்டிங் செல்வது சகஜமாக இருக்கலாம். ஆனால் நான் அப்படி இல்லை, யாருடனும் டேட்டிங் செய்வது பிடிக்காது. அடுத்து விஞ்ஞானி, மீகாமன் படங்களில் நடிக்கிறேன். இவ்வாறு சஞ்சனா சிங் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி