செய்திகள்,திரையுலகம் அஜித் படத்துக்கு மீண்டும் இசையமைக்க ஆசைப்படும் தேவிஸ்ரீ பிரசாத்!…

அஜித் படத்துக்கு மீண்டும் இசையமைக்க ஆசைப்படும் தேவிஸ்ரீ பிரசாத்!…

அஜித் படத்துக்கு மீண்டும் இசையமைக்க ஆசைப்படும் தேவிஸ்ரீ பிரசாத்!… post thumbnail image
சென்னை :-அஜித் , விஜய் , விக்ரம் , சூர்யா ஆகிய நான்கு டாப் ஸ்டார்களுக்கும் இசையமைத்து இருப்பவர் தேவிஸ்ரீ பிரசாத். ‘சச்சின்’, ‘வில்லு’, ‘கந்தசாமி’, ‘ஆறு’, ‘சிங்கம்’, சிங்கம் 2′, ‘வீரம்’ என அவர் இசையமைத்த படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.ஆனால், அஜித்துக்கு டியூன் போட ரொம்பக் கஷ்டப்பட்டதாகக் கூறுகிறார் தேவிஸ்ரீ பிரசாத்.

அஜித், விஜய், விக்ரம், சூர்யா நாலு பேருமே மாஸ் ஹீரோக்கள். எல்லோருக்கும் கஷ்டப்பட்டுதான் BGM போட்டேன் . ஆனா அதிகம் கஷ்டப்பட்டு பயந்து போட்டது அஜித் சாருக்குதான். ஏன்னா நடையால ,ஒரே ஒரு பார்வையால ஏதாவது ஒரே வார்த்தையில தியேட்டர அதிரவைக்கிற அந்த FIRE ரஜினி சார்க்கு அப்பறம் அஜித் சாருக்குதான் இருக்கு.அஜித் சாருக்கு BGM சாதரணமா போட முடியாது. நம்மால எவ்வளவு மாஸா போட முடியுமோ அதைப் போட்டாதான் அஜித் ரசிகர்கள் அத கொஞ்சமாவது ஏத்துப்பாங்க. அதனால சார் வர்ற ஒவ்வொரு சீனுக்கும் பயந்துகிட்டே இது நல்லா வருமானு கஷ்டப்பட்டு போட்டேன். அதுவும் அந்த ரயில் சண்டைக்கு , சார் உயிரப் பணையம் வச்சு ஈசியா பண்ணாரு.

யாருமே எடுக்காத ரிஸ்க் எடுத்திருக்கார் BGM சொதப்பிட்டா வெளியில தலைகாட்டமுடியாதேனு பயந்தே போட்டேன். நான் பிண்ணனி இசைக்கு அதிக நாள் எடுத்துக்கிட்டது ‘வீரம்’ படத்துக்குதான் . அஜித் சாரோட சமீபத்திய படங்கள் எல்லாமே BGM பட்டையக் கிளப்பியிருக்கும்.
‘வீரம்’ ரிலீஸ் முதல் நாள் இரவுகூட வீட்டுல ‘மங்காத்தா’ போட்டுப் பார்த்தேன் . அதுல பிண்ணனி இசை மிரட்டியிருக்கும் . இதையெல்லாம் பார்த்த தல ரசிகர்கள் நம்ம இசையை ஏத்துப்பாங்களான்னு பயம் வந்துடுச்சு.ஆனா, ‘வீரம்’ படத்தை தியேட்டர்ல பாக்குறப்ப அஜித்சார் வர்ற சீன்ஸ்லாம் விசில் பறக்குறப்பதான் நம்ம இசையும் நல்லா வந்துடுச்சுனு சந்தோஷப்பட்டேன் . அஜித் படத்துக்கு மீண்டும் இசையமைக்க ஆசையா இருக்கு.” என்கிறார் தேவிஸ்ரீ பிரசாத்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி