செய்திகள்,திரையுலகம் போலிகளால் பாதிக்கப்பட்டு பேஸ்புக்கில் இணைந்தார் ஸ்ருதி!…

போலிகளால் பாதிக்கப்பட்டு பேஸ்புக்கில் இணைந்தார் ஸ்ருதி!…

போலிகளால் பாதிக்கப்பட்டு பேஸ்புக்கில் இணைந்தார் ஸ்ருதி!… post thumbnail image
சென்னை:-பெரும்பாலான நடிகைகள் டுவிட்டரில் உள்ளனர். தங்களை பற்றிய லேட்டஸ்ட் தகவல்களை டுவிட்டரில் வெளியிடுகிறார்கள். ஸ்ருதிஹாசனும் அப்படித்தான். ஆனால் அவர் பேஸ்புக்கில் இணையாமல் இருந்தார்.

இதனால் சிலர் அவரது பெயரில் போலி பக்கம் தொடங்கி பேஸ்புக்கில் பல தகவல்களை வெளியிட்டு வந்தனர். அதில் பெரும்பாலும் போலி தகவல்களாக இருந்தன. திடீரென அந்த பார்ட்டிக்கு போய் வந்தேன். அந்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு இந்த நடிகர்தான் பிடிக்கும் என பிரச்னையில் சிக்கிவிடும் போலி தகவல்களும் அந்த பேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றது.இதனால் ஸ்ருதி பலவிதங்களில் பாதிக்கப்பட்டு நொந்துபோனார். போலி நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து தானே பேஸ்புக்கில் இணைய முடிவு செய்துவிட்டார். இது பற்றி ஸ்ருதி கூறும்போது, ரசிகர்கள் பலர் பேஸ்புக்கில் சேர அழைப்பு விடுத்தனர். போலிகளை தவிர்க்க இப்போது பேஸ்புக்கில் பக்கம் தொடங்கிவிட்டேன். இனி என்னைப் பற்றிய அனைத்து உண்மையான தகவல்களையும் ரசிகர்கள் தெரிந்துகொள்ள முடியும் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி