செய்திகள்,திரையுலகம் தன்னுடன் நடித்த கதாநாயகி நடிக்கும் போது சைட் அடிப்பேன் என கூறும் நடிகர்!…

தன்னுடன் நடித்த கதாநாயகி நடிக்கும் போது சைட் அடிப்பேன் என கூறும் நடிகர்!…

தன்னுடன் நடித்த கதாநாயகி நடிக்கும் போது சைட் அடிப்பேன் என கூறும் நடிகர்!… post thumbnail image
சென்னை:-விஜய் தொலைக்காட்சியில் இந்த வாரம் ஞாயிறு இரவு காபி வித் டிடி நிகழ்ச்சியில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார் உடன் காபி குடித்தார் திவ்யதர்சினி. சுப்ரமணியபுரம் தொடங்கி சமீபத்தில் ரிலீசான பிரம்மன் வரை இயக்கிய, நடித்த அனுபவங்களையும், படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டார் சசிகுமார்.

பள்ளியில் படிக்கும் போதே திரைப்பட இயக்குநராக வரவேண்டும் என்பதுதான் என் லட்சியம். சுவர் ஏறி குதித்து அப்போதே சினிமா பார்க்கப் போவேன்.முதல்படமான சுப்ரமணியபுரம் இயக்கும் போது நடிகை சுவாதிக்கு வெட்கப்படத் தெரியாது. எதிரே நின்று கண்ணடித்து வெட்கப்பட வைப்பேன்.
என்னுடன் நடித்த கதாநாயகியை படங்களில் நடிக்கும் போது சைட் அடிப்பேன். சூட்டிங் ஸ்பாட்டில் அதிகமாக கோபம் வரும், மைக், செல்போன்களை அதிகம் உடைத்திருக்கிறேன்.

பாலுமகேந்திரா நடித்த தலைமுறைகள் படத்தை தயாரித்தது மறக்க முடியாத அனுபவம் என்று கூறும் போது நெகிழ்ச்சியடைந்தார் சசிகுமார்.நிகழ்ச்சியில் திவ்யதர்சினி கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சசிகுமார் சில கேள்விகளுக்கு சரியாக பதில் கூறவில்லை. அதற்காக சில தண்டனைகளை கொடுத்தார். ஜெய் போல நடித்து காட்டிய சசிகுமார், சிலம்பம் சுற்றும் போது டிடியை செல்லமாக அடித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி