செய்திகள்,திரையுலகம் 2 வயது மகனுக்காக குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடும் நடிகை…

2 வயது மகனுக்காக குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடும் நடிகை…

2 வயது மகனுக்காக குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடும் நடிகை… post thumbnail image
மும்பை:-பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ஷில்பா ஷெட்டி, திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து நடிக்காமல் ஓய்வு பெற்றார். அவரை எத்தனையோ படத்தயாரிப்பாளர்கள் நடிக்க அழைத்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பின்னர் ஒரு மகனை பெற்ற பின்னும் அவருக்கு சினிமாவில் மீண்டும் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தார்.

இந்நிலையில் ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆட சமீபத்தில் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து காரணம் கேட்டபோது, ‘தற்போது இரண்டு வயதாகும் என்னுடைய மகன் வியான் குண்டர்க்கு இந்த பாடலை போட்டுக்காட்டினேன். அதுமுதல் தினமும் பத்து முறையாவது அந்த பாடலை கேட்கவேண்டும் என்று அடம் பிடிப்பதாகவும், அந்த பாடலை போட்டால்தான் சாப்பிடுவதாக கூறுவதாகவும் கூறினார். எனவே இந்த பாடலுக்கு நடனம் ஆட அவரே முடிவு செய்துவிட்டார்.

Dishkiyaoon என்ற படத்தில்தான் இந்த பாடல் இடம்பெறுகிறது. இந்த படத்தை ஷில்பா ஷெட்டியே தயாரிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சன்னிதியோல், ஹர்மன் பவேஜா, பிரஷாந்த் நாராயணன், ஆதியா பஞ்சோலி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் மார்ச் மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி