செய்திகள்,திரையுலகம் மீண்டும் வருகிறார் ‘முள்ளும் மலரும்’ மகேந்திரன்!…

மீண்டும் வருகிறார் ‘முள்ளும் மலரும்’ மகேந்திரன்!…

மீண்டும் வருகிறார் ‘முள்ளும் மலரும்’ மகேந்திரன்!… post thumbnail image
சென்னை:-உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை உள்பட பல படங்களை இயக்கியவர் மகேந்திரன். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. அடுத்த மாதம் தொடக்கத்தில் ஷூட்டிங் தொடங்குகிறது.

ஒரே மாதத்தில் படத்தை முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். இளையராஜா இசையமைக்கிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இது பற்றி மகேந்திரன் கூறியது: புதுமைப்பித்தனின் சிறுகதையை தழுவி இந்த படத்தை உருவாக்குகிறேன். நடுத்தர வர்க்கத்தினர் சந்திக்கும் பொதுவான ஒரு பிரச்னை பற்றிய படமிது.

கோவை அருகே மார்ச் முதல் வாரத்தில் ஷூட்டிங் தொடங்கி, மார்ச் இறுதியில் முடிக்க திட்டமிட்டுள்ளேன். ஒரு சில பிரபல நடிகர்களை தவிர புதுமுகங்களே இதில் நடிப்பார்கள். இளையராஜாவை தவிர்த்து என்னால் படம் பண்ண முடியாது. அவரது இசை எனது படத்துக்கு அவசியம். அவருடன் மீண்டும் இணைவது சந்தோஷம். இம்மாத இறுதிக்குள் அவர் பாடல் பதிவை முடித்துவிடுவார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி