செய்திகள்,திரையுலகம் நடிகைகளின் பெயருக்கு பின்னால் வரும் ஜாதிப் பெயரை நீக்கவேண்டும்: சீமான் பரபரப்பு பேச்சு!…

நடிகைகளின் பெயருக்கு பின்னால் வரும் ஜாதிப் பெயரை நீக்கவேண்டும்: சீமான் பரபரப்பு பேச்சு!…

நடிகைகளின் பெயருக்கு பின்னால் வரும் ஜாதிப் பெயரை நீக்கவேண்டும்: சீமான் பரபரப்பு பேச்சு!… post thumbnail image
சென்னை:-முற்றிலும் புதுமுகங்களை வைத்து உருவாகி வரும் புதிய படம் ‘சினேகாவின் காதலர்கள்’. இப்படத்தை பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் எழுதி, இயக்குகிறார். தமிழன் டிவி தயாரிக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் சீமான், தயாரிப்பாளர்கள் கேயார், சிவா, சதீஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் கேயார் பேசும்போது, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.இதனால், வெற்றி பெற்றும் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் தவித்து தயாரிப்பாளர் சங்கம், இனி முழுவீச்சில் களமிறங்க உள்ளது. முதல் திட்டமாக இனிமேல் எடுக்கப்பட்டும் சிறு, பெரிய படங்களை விளம்பரம் செய்ய அதிகபட்சமாக ரூ.40 லட்சம்தான் செலவு செய்ய வேண்டும் என்ற திட்டத்தை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளோம் என்று பேசினார்.

சீமான் பேசும்போது, இன்று வரும் பெரும்பாலான தமிழ் படங்களில் ஆங்கில வார்த்தைகள் அதிகமாக உச்சரிக்கப்படுகின்றன. தமிழ் படங்களை எடுக்கும் நண்பர்கள் தயவுசெய்து ஆங்கில கலப்பு வசனங்கள் இல்லாமல் முழுக்க தமிழ் வசனங்கள் வரும்படி படத்தை எடுக்க முன்வரவேண்டும்.மேலும், தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகளின் பெயருக்கு பின்னால் அவர்களின் ஜாதிப் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இதை கண்டிப்பாக நீக்கவேண்டும் என்று பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி