செய்திகள் கணவரின் துணையுடன் 22 கொலைகள் செய்த 19 வயது இளம்பெண்!…

கணவரின் துணையுடன் 22 கொலைகள் செய்த 19 வயது இளம்பெண்!…

கணவரின் துணையுடன் 22 கொலைகள் செய்த 19 வயது இளம்பெண்!… post thumbnail image
அமெரிக்கா:-மிரண்டா பார்பௌர் என்ற வாஷிங்டன் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது வாழ்நாளில் 100 கொலைகள் செய்யவேண்டும் என்ற குறிக்கொள் வைத்து இதுவரை 22 கொலைகள்வரை செய்துள்ளார்.

தனது வாழ்நாளில் நான்கு வயதிலேயே தான் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதற்கு பழிவாங்கவே தவறான நபர்களை தேடிக்கண்டுபிடித்து அவர்களை மயக்கி, அவர்களுடைய சொத்துக்களை எல்லாம் தனது பெயருக்கு மாற்றிவிட்டு பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்துவிடுவதாகவும் அவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள வாஷிங்டன் போலீஸ் அவர் செய்த கொலைகள் அனைத்தையும் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இவர் செய்யும் கொலைகளுக்கு இவருடைய கணவரும் உடந்தையாக இருந்துள்ளார்.மிரண்டா பார்பௌர் தனது கணவரின் உதவியால் ஆன்லைனில் தவறான பெரிய மனிதர்களை கண்டுபிடித்து அவர்களுடன் சேட்டிங்கில் ஈடுபட்டு அதன் பின்பு கணவர் திட்டம் வகுத்து கொடுக்க, மிரண்டா பார்பௌர் அதை செயல்படுத்துவாராம். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இவரது கணவரும் கைது செய்யப்பட்டனர்.மிரண்டா பார்பௌர் தான் செய்த கொலைகளை ஒப்புக்கொண்டாலும் அவருக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பில்லை என்று அவருடைய வழக்கறிஞர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி