அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ப.சிதம்பரம் மீது ’ஷு’ வீசியவர் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. வேட்பாளராக அறிவிப்பு…

ப.சிதம்பரம் மீது ’ஷு’ வீசியவர் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. வேட்பாளராக அறிவிப்பு…

ப.சிதம்பரம் மீது ’ஷு’ வீசியவர் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. வேட்பாளராக அறிவிப்பு… post thumbnail image
புதுடெல்லி:-பாராளுமன்ற பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் எம்.பி. பதவிக்கு போட்ட்டியிடும் 20 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் பத்திரிகையாளரான ஜர்னைல் சிங் என்பவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் இருந்து ஜகதீஷ் டைட்லர் விடுவிக்கப்பட்டது தொடர்பாக கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அப்போதைய மத்திய உள்துறை மந்திரியான ப.சிதம்பரத்திடம் ஜர்னைல் சிங் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ப.சிதம்பரம் அளித்த பதிலில் திருப்தியடையாத சீக்கிய மதத்தை சேர்ந்த ஜர்னல் சிங், தனது காலில் அணிந்திருந்த ‘ஷு’வை கழற்றி அவர் மீது வீசினார். வீசப்பட்ட ‘ஷு’ ப.சிதம்பரம் மீது படாமல் அவர் அருகில் விழுந்தது.இச்சம்பவத்தின் போது பிரபல இந்தி நாளிதழான ’தைனிக் ஜக்ரன்’ நிருபராக பணியாற்றிய ஜர்னைல் சிங், ஆம் ஆத்மி கட்சியின் மேற்கு டெல்லி தொகுதிக்கான எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி