செய்திகள் சாவு வீட்டில் ஒப்பாரி வைத்த பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்தது…

சாவு வீட்டில் ஒப்பாரி வைத்த பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்தது…

சாவு வீட்டில் ஒப்பாரி வைத்த பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்தது… post thumbnail image
சென்னை:-சென்னை மைலாப்பூர் சண்முகம் பிள்ளை தெருவை சேர்ந்த அரிகரன் என்பவர் வேளச்சேரியில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அவரது உடல் நேற்று அவரது வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உறவு பெண்கள் ஏராளமானோர் குளிர்சாதன பெட்டி மீது படுத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து 6 பெண்கள் தூக்கி வீசப்பட்டனர். இதனால் சாவு வீடு பரபரப்பானது. மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில், அஞ்சலி, தமிழரசி, விமலா, ராணி, சுந்தரம்மாள், மேகாத்தாள் ஆகிய 6 பேரும் பலத்த காயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இவர்களில் ராணி, சுந்தரம்மாள், மேகாத்தாள் ஆகியோரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக மைலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி