அரசியல்,செய்திகள் சோனியாகாந்தி கனிமொழி எம்.பி. திடீர் சந்திப்பு…

சோனியாகாந்தி கனிமொழி எம்.பி. திடீர் சந்திப்பு…

சோனியாகாந்தி கனிமொழி எம்.பி. திடீர் சந்திப்பு… post thumbnail image
நியூ டெல்லி:-பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணியை இறுதி செய்ய தமிழக அரசியல் கட்சிகளும், தேசிய கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க. தனது கூட்டணிகளுடன் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், தி.மு.க. தனது கூட்டணியை பலப்படுத்தும் பணியை விரைவு படுத்தியுள்ளது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவாக இருந்த தி.மு.க. எம்.பி., கவிஞர் கனிமொழியை, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெலிபோனில் தொடர்பு கொண்டு, உடல்நிலை குறித்து விசாரித்தார்.இந்நிலையில் உடல்நிலை சீரடைந்ததை தொடர்ந்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக கவிஞர் கனிமொழி எம்.பி. டெல்லி சென்றார். பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற பின்னர் அவர் டெல்லியில் சோனியாகாந்தியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது கவிஞர் கனிமொழி எம்.பி. தனது உடல்நிலைக் குறித்து டெலிபோனில் விசாரித்ததற்கு சோனியாகாந்திக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஏற்படலாம் என்று கருதப்பட்டு வரும் வேளையில் கனிமொழியின் சந்திப்பு அதற்கு அச்சாரமாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி