செய்திகள்,திரையுலகம் விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் கதை லீக் ஆனது?…

விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் கதை லீக் ஆனது?…

விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் கதை லீக் ஆனது?… post thumbnail image
கொல்கத்தா:-விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள புதிய படம் கொல்கத்தாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருக்கும் இப்படத்தில் வில்லனாக பெங்காலி நடிகர் தோட்டா ராய் செளத்ரி நடித்து வருகிறார். படத்தில் அவர் வெளிநாட்டு தாதாவாக வருகிறாராம்.

இவரிடம் ஒரு வட இந்திய மீடியா தமிழ்ப்படத்தில் நடிப்பது பற்றி பேட்டி கண்டுள்ளது. அதைப்பற்றி சிலாகித்துச் சொன்ன அவரிடம் படத்தில் உங்கள் கேரக்டர் என்ன? என்று கேள்வி கேட்டபோது தான் சிக்கல் வந்தது.கேரக்டரைப் பற்றி சுவாரஷ்யமாக சொல்ல ஆரம்பித்த அவர் அப்படியே படத்தின் மொத்த கதையையும் சொல்லி விட்டார்.
கதைப்படி, இவரை பிடிப்பதற்காக கொல்கத்தா போலீஸ், விஜய்யின் உதவியை நாடுகிறது. விஜய்யின் உதவியால் தாதாவை பிடித்து ஜெயிலில் அடைக்கிறார்கள்.ஜெயிலில் இருந்து தப்பிக்கும் வில்லன், விஜய்யை கொலை செய்யத் தேடுகிறான். அப்போது தான் விஜய் தோற்றத்தில் இருவர் இருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. இறுதியில் என்னவாகிறது என்பது தான் விஜய் படத்தின் கதையாம்.

இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். இன்று முதல் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஜெயில் காட்சிகள் அனைத்தையும் ராஜமுந்திரியில் படமாக்க இருக்கிறார்கள். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஏ.ஆர்.முருகதாஸோ வில்லன் தோட்டா மீது துப்பாக்கியை நீட்டாத குறையாக செம கடுப்பில் இருக்கிறாராம். அவரை திட்டி படத்தை தாமதப்படுத்துவதை விட கதையில் சில மாற்றங்களை செய்யலாமா? என்று யோசித்து வருகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி