செய்திகள் நஸ்ரியாவை இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!…

நஸ்ரியாவை இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!…

நஸ்ரியாவை இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!… post thumbnail image
கேரளா:-பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மங்கரை கிராமத்தை சேர்ந்த அப்துல் ரகுமானுக்கு (47) ஐந்து மகள்கள். இதில் இரண்டாவது மகள் நஸ்ரியா (16) பிளஸ் 2 படித்து வருகிறார்.ஒருநாள் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் நஸ்ரியாவை தாக்கி வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் ரகுமான். இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் ரகுமான் மிரட்டியுள்ளார்.தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்ல முடியாமல் நஸ்ரியா தவித்து வந்துள்ளார்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரகுமான், கடந்த 2 ஆண்டுகளாக மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதன் விளைவாக நஸ்ரியா கர்ப்பமானார். மருத்துவரிடம் அழைத்து சென்று கர்ப்பத்தையும் கலைத்துள்ளார் ரகுமான். கடந்த ஒரு மாதமாக ரகுமானின் கொடுமை எல்லை மீறியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு செல்போனில் ஆபாச படங்களை காட்டி நஸ்ரியாவை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார்.ஆனால், நஸ்ரினா மறுக்கவே, கொலை செய்து விடுவதாக மிரட்டி தனது ஆசையை தீர்த்துக் கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் பாலியல் தொந்தரவு அதிகரிக்கவே மனம் வெறுப்படைந்து நஸ்ரினா, தனது தாயிடம் நடந்த விவரங்களை கூறி அழுது இருக்கிறார்.

இது குறித்து நஸ்ரியாவின் தாயார் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ரகுமானை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நஸ்ரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பாலியல் கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து நஸ்ரியா அரசு மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி