செய்திகள் பிரிந்து சென்ற மனைவியின் மீது ஆசிட் வீசிய கணவன்…

பிரிந்து சென்ற மனைவியின் மீது ஆசிட் வீசிய கணவன்…

பிரிந்து சென்ற மனைவியின் மீது ஆசிட் வீசிய கணவன்… post thumbnail image
லாகூர்:-பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வருபவர் நசீர். அவரது மனைவியான ஷகீனா, நசீரை விட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை ஒன்றாக சேர்ந்து வாழ நசீர் அழைத்தபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து தனது மனைவி மீதும், தனது ஒரு வயது குழந்தையின் மீதும் வீசினார். அப்போது அங்கிருந்த ஷகீனாவின் சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி மீதும் ஆசிட் பட்டதில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் குழந்தையின் நிலைமை மட்டும் அபாய கட்டத்திலேயே உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் தான் விவாகரத்து கோரி இருவரும் கோர்ட்டை அணுகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நசீர் மீது தீவிரவாத தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி