அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இலங்கையில் தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்…

இலங்கையில் தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்…

இலங்கையில் தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்… post thumbnail image
மன்னார்:-இலங்கையில் வடகிழக்கு பகுதியான மன்னார் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 21ந் தேதி குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது நான்கு எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டது. இது உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விடுதலைப்புலிகள் உடனான இறுதிக் கட்ட போரின் போது பல்வேறு மனித மீறல்கள் இடம்பெற்றதாகவும் 50000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் அங்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. பள்ளம் தோண்டிய பகுதியில் தொடர்ந்து ஆய்வு செய்து மேலும் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதா என அறியவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.இதை ஏற்று பல்வேறு கட்டமாக அப்புதைகுழியை மீண்டும் தோண்டிப்பார்க்கும் பணி நடைபெற்றது. அவ்வாறு இன்று நடந்த அகழ்வு பணியின் போது மேலும் 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இன்று கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடுகளோடு சேர்த்து இதுவரை அப்புதைகுழிக்குள் 57 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோண்ட தோண்ட சடலம், குவியல் குவியலாக எலும்பு கூடுகள் கிடைத்திருப்பது அங்கு பெருத்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இப்பகுதி நீண்ட காலமாக இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மரணமடைந்தவர்கள் அனைவரும் ராணுவத்தினரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி