அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிரதமர் பதவியை ஏற்க தயார் என ராகுல்காந்தி அறிவிப்பு…

பிரதமர் பதவியை ஏற்க தயார் என ராகுல்காந்தி அறிவிப்பு…

பிரதமர் பதவியை ஏற்க தயார் என ராகுல்காந்தி அறிவிப்பு… post thumbnail image
ஆமதாபாத்:-காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசார பொறுப்பை ஏற்றுள்ளார்.தற்போது அவர் நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்.

இன்று (சனிக்கிழமை) பகல் 11 மணிக்கு அவர் குஜராத் மாநிலத்துக்கு செல்கிறார். தெற்கு குஜராத் பகுதியில் கடந்த 2 வாரமாக இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடந்து வருகிறது. அந்த யாத்திரையில் ராகுல் பங்கேற்றார்.பர்டோலி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் சிறிது தூரம் அவர் காங்கிரஸ் தொண்டர்களுடன் நடந்து சென்றார். இன்று மதியம் அவர் அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

பர்டோலி தொகுதி மலைவாழ் மக்கள் நிறைந்த தொகுதியாகும். கடந்த 3 தேர்தல்களில் இந்த தொகுதியில் மத்திய மந்திரி தஸ்கர் சவுத்திரி வெற்றி பெற்றார்.
வரும் தேர்தலிலும் அங்கு காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்யும் வகையில் ராகுல் இன்று அங்கு நடந்த கூட்டத்தில் பேசினார். இது குஜராத் மாநில பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு கடும் சவாலாக மாறியுள்ளது.முன்னதாக நேற்று ராகுல்காந்தி ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்றார். ராஞ்சியில் அவர் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:–

தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது காங்கிரசில் வழக்கம் அல்ல. தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்று எம்.பி.க்கள் எல்லாரும் என்னை தேர்ந்து எடுத்தால் பிரதமர் பதவியை ஏற்க தயாராக உள்ளேன்’’ என்றார்.
பிரதமர் மன்மோகன்சிங் மீது எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் அவர் மிகச் சிறந்த பிரதமர்.இன்னும் சில ஆண்டுகள் கழித்து தகவல் அறியும் சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், நில சீர்திருத்தச் சட்டம் போன்ற சட்டங்கள் பேசப்படும். அப்போது தான் இதற்கு காரணமானவர் மன் மோகன்சிங் என்பது தெரிய வரும்.அவரது 10 ஆண்டு ஆட்சியில் இந்த நாடு ஏராளமான நன்மைகளை பெற்றுள்ளது. அவர் பல தொலை நோக்கு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி சாதி, மதம் கடந்து செயல்படுகிறது. நாம் இந்தியர்கள் என்ற கோஷத்துடன் செயல்படுகிறோம்.எனவே மதவாத சக்திகள் யார் என்பதை புரிந்து கொண்டு, அவர்களிடம் இருந்து மக்கள் விலகி நிற்க வேண்டும்.இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி