செய்திகள்,விளையாட்டு முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503 ரன்கள் குவிப்பு…

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503 ரன்கள் குவிப்பு…

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503 ரன்கள் குவிப்பு… post thumbnail image
ஆக்லாந்து:-இந்தியா – நியூசிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை எடுத்தது. மெக்கல்லம் 143 ரன்களுடனும், ஆண்டர்சன் 43 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் மெக்கல்லம் இரட்டை சதம் அடித்தார். இதனால் நியூசிலாந்து அணி 503 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. கடைசி விக்கெட்டாக மெக்கல்லம் 224 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்தியாவின் இஷாந்த்சர்மா 6 விக்கெட்டை வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 18 ஓவரில் 45 ரன்களை எடுத்து 3 விக்கெட்டை இழந்தது. புஜாரா 1 ரன்னிலும், விராட் கோலி 4 ரன்னிலும் ஆட்டத்தை இழந்தனர்.
தவான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். பின்னர் விளையாடிய முரளி விஜய்(22), ரோகித்சர்மா(16) ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் விளையாடி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி