செய்திகள்,திரையுலகம் விபசார வழக்கில் நடிகைக்கு அபராதம்…

விபசார வழக்கில் நடிகைக்கு அபராதம்…

விபசார வழக்கில் நடிகைக்கு அபராதம்… post thumbnail image
சென்னை:-பிரபல தமிழ் நடிகை புவனேஸ்வரி. பாய்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மும்பை பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக கடந்த 2.10.2009 அன்று சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் புவனேஸ்வரியை கைது செய்தனர்.

இந்த வழக்கு சைதாப்பேட்டை பெருநகர 4–வது நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு சரவணன் முன் நடந்தது. இதில் 6 பேர் சாட்சியம் அளித்தனர்.
இந்த வழக்கில் நேற்று மாஜிஸ்திரேட்டு சரவணன் தீர்ப்பு அளித்தார். அதில், நடிகை புவனேஸ்வரி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து குற்றம் புரிந்த புவனேஸ்வரிக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் வேலுச்சாமி ஆஜராகி வாதிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி