அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பலாத்கார வழக்கில் ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர் கைது…

பலாத்கார வழக்கில் ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர் கைது…

பலாத்கார வழக்கில் ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர் கைது… post thumbnail image
புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஹரிகேஷ் நகர் தலைவரான ராமன் சுவாமி, ஜனவரி மாதம் 25-ம் தேதி திருமணமான பெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கெடுத்துவிட்டதாக பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து கைதுசெய்யப்பட்ட ராமன் சுவாமியை நேற்று போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 8-ம் தேதி வரை ராமன் சிங்கை நீதிமன்றக்காவலில் அடைக்க உத்தரவிட்டார்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் நண்பராக பழகிய ராமன் சுவாமியிடம் அந்த பெண் வேலை வாங்கி கொடுத்து உதவிடுமாறு வேண்டியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி ஓக்லா நகருக்கு வரச்சொன்ன ராமன் சுவாமி, அந்த பெண்ணை காரில் அழைத்து சென்று ஒரு வீட்டில் வைத்து கற்பழித்துள்ளார்.

இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதற்கு பயந்த அந்த பெண், பின்னர் தைரியப்படுத்திக்கொண்டு தற்போது புகார் அளித்துள்ளார். அவரது மருத்துவ அறிக்கையும் கற்பழிப்பு நடந்தது என்பதை உறுதிபடுத்தியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி