அரசியல்,செய்திகள் பஞ்சாப் பொற்கோயில் மீதான ஆபரேஷன் புளூ ஸ்டார் தாக்குதலுக்கு பிரிட்டன் ஆலோசனை வழங்கியது உண்மை…

பஞ்சாப் பொற்கோயில் மீதான ஆபரேஷன் புளூ ஸ்டார் தாக்குதலுக்கு பிரிட்டன் ஆலோசனை வழங்கியது உண்மை…

பஞ்சாப் பொற்கோயில் மீதான ஆபரேஷன் புளூ ஸ்டார் தாக்குதலுக்கு பிரிட்டன் ஆலோசனை வழங்கியது உண்மை… post thumbnail image
லண்டன்:-1984ஆம் ஆண்டு நடந்த பொற்கோயில் தாக்குதல் சம்பவமான ஆபரேஷன் புளூ ஸ்டார் தாக்குதலில் பிரிட்டனுக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பான உண்மைகளை தெரிவிக்கும்படி பிரிட்டன் நாட்டின் சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினர், அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார்.

காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதிகளை பொற்கோயிலில் இருந்து வெளியேற்றுவது குறித்து அந்நாட்டு அரசிடம் ஆலோசனை வழங்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இக்கடிதத்திற்கு அப்போதைய பிரதமர் மார்கரெட் தாட்செர் ஒப்புதல் கொடுத்த பின் சிறப்பு படை அதிகாரி ஒருவர் அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 8ந் தேதிக்கும் 19ந் தேதிக்கும் இடையே இந்தியாவிற்கு வந்தார்.அவர் இந்திய ராணுவம் வரைவு செய்திருந்த தாக்குதல் திட்டத்தில் சில ஆலோசனை வழங்கியதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக் இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பின்னர் பிரதமர் இந்திராவின் ஒப்புதலுக்குப் பின் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி அந்நாட்டு மூத்த அரசு ஊழியருக்கு பிரதமர் டேவிட் கேமரூன் உத்தரவிட்டதை தொடர்ந்து, இது தொடர்பாக விசாரித்து தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி