செய்திகள்,திரையுலகம் அஜீத்துக்கு தனக்கு வந்த கதையை விட்டுக் கொடுத்த ரஜினி…

அஜீத்துக்கு தனக்கு வந்த கதையை விட்டுக் கொடுத்த ரஜினி…

அஜீத்துக்கு தனக்கு வந்த கதையை விட்டுக் கொடுத்த ரஜினி… post thumbnail image
சென்னை:-கோச்சடையான் படம் ஏப்ரல் 11–ந் தேதி ரிலீசாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி யார் இயக்கத்தில் நடிப்பார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் மோகன்லால்–மீனா நடித்து ஹிட்டான ‘திரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் ரஜினி மறுத்து விட்டார். இதையடுத்து கமலை ஒப்பந்தம் செய்தனர்.

இதையடுத்து ரஜினி ஷங்கர், அல்லது கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும் பேச்சு கிளம்பியது.ரஜினியும் ஷங்கரும் சமீபத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது ரஜினியை வைத்து அடுத்த படத்தை இயக்குவதற்கான கதையை ஷங்கர் விளக்கியதாக கூறப்பட்டது. கதை முழுவதையும் கேட்ட ரஜினிக்கு மிகவும் பிடித்து போனதாம். கதை நன்றாக இருக்கிறது என்று பாராட்டியவர் இந்த கதையில் என்னைவிட அஜீத் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறினாராம்.

ஷங்கரும் அதை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. ரஜினி சொன்னதால் அஜீத்தும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க சம்மதித்து விட்டாராம். டிசம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி