செய்திகள்,திரையுலகம் மரண படுக்கையில் டப்பிங் பேசிய நடிகர்…

மரண படுக்கையில் டப்பிங் பேசிய நடிகர்…

மரண படுக்கையில் டப்பிங் பேசிய நடிகர்… post thumbnail image
ஹைதராபாத்:-பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் (90) சமீபத்தில் காலமானார். அவரது இறுதி நாட்கள் பற்றி மகன் நாகார்ஜுனா உருக்கமாக பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

என் அப்பா நாகேஸ்வர ராவ் கடைசியாக எங்களுடன் சேர்ந்து மனம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கு கேன்சர் அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவமனையில் இருந்து 15 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய அவர், படுக்கையில் ஓய்வு எடுத்து வந்தார். அப்போது என்னை அழைத்து, மனம் படத்துக்கான டப்பிங்கை வீட்டிலேயே பேசி தந்து விடுகிறேன்.என்னுடைய நிலைமை இன்னும் மோசமாகிவிட்டால் பேச முடியாது. பிறகு மிமிக்ரி செய்பவரைதான் என் குரலில் பேச வைக்க வேண்டும். இங்கே டப்பிங் கருவிகளை கொண்டு வா என்றார். அதன்படி வீட்டுக்கே கருவிகள் கொண்டு வரப்பட்டன. படுக்கையில் இருந்தபடியே டப்பிங் பேசி முடித்தார். 90வது பிறந்த நாள் அன்று அவர் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்தும் தனக்கு தெரிந்தவர்களை எல்லாம் நேரில் அழைத்து பேசினார்.

சுமார் 2 ஆயிரம் பேரை அவர் சந்தித்தார். ஒரு மணி நேரம் அவர் பேசி கொண்டிருந்தார். அதை அப்படியே ரெக்கார்டிங் செய்திருக்கிறோம். அதுவொன்றுதான் அவரது வாழ்க்கையை சொல்லும் ஆதாரமாக எங்களிடம் இப்போது உள்ளது. அதை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளேன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி