செய்திகள் மனைவி குளிக்கும் போது ஒளிந்து இருந்து பார்த்த கணவன் மீது போலீசில் புகார்…

மனைவி குளிக்கும் போது ஒளிந்து இருந்து பார்த்த கணவன் மீது போலீசில் புகார்…

மனைவி குளிக்கும் போது ஒளிந்து இருந்து பார்த்த கணவன் மீது போலீசில் புகார்… post thumbnail image
ஆஸ்திரேலியா:-ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நீதி மன்றத்தில் ஒரு வினோதமான வழக்கு வந்தது அதில் 37 வயது ஒரு பெண் தனது கணவர் தன்னை மறைந்து இருந்து வேவு பார்ப்பதாகவும் இதனால் தனது சுதந்திரம் பாதிக்கபட்டுவதாகவும் புகார் கூறினார்.

இது குறித்து அரசு தரப்பு வக்கீல் ஸ்டீவன் ஹார்ப்பர் கள் கூறியதாவது,
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 37 வயது மனைவி உடையில்லாமல் குளித்து கொண்டு இருக்கும் போது அவர்து 57 வயது நிரம்பிய கணவர் மேலே தண்ணீர் தொட்டி மறைவில் இருந்து பார்த்து உள்ளார்.இது குறித்து அவர்கள் விவாதித்து கொண்டனர் கணவர் எதிர்காலத்தில் மனைவியின் மரியாதை மற்றும் தனியுரிமை பாதிக்காத வகையில் நடந்து கொள்வதாகவும் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாகவும் மனைவிக்கு கடிதம் எழுதினார்.அக்டோபர் மாதம் குளியலறை கண்ணாடியில் ஒரு கீறல் இருப்பதையும் அதன் வழியே பார்க்கும் வகையில் தூவாரம் ஏற்படுத்தப்பட்டு வீடியோ எடுக்கபட்டு இருப்பதையும் மனைவி அறிந்தாள்.இதை தொடர்ந்து மனைவி போலீசில் புகார் செய்தார் போலீசார் கணவனின் கம்ப்யூட்டர் மற்றும் அதன் தொடர்புடைய சாதனங்களை பறிமுதல் செய்தனர்..
இவ்வாறு அவர் கூறினார்

கணவன் தனது மன நிறைவுக்காக மனைவி குளிக்கும் போது வீடியோ எடுத்ததாகவும் பின்னர் அந்த வீடியோ காட்சியை அளித்து விட்டதாகவும் கூறினார்
வக்கை விசாரித்த நீதிமன்றம் தண்டனை எதுவும் இல்லாமல் கணவனை விடுவித்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி