செய்திகள்,திரையுலகம் நடிகர்களின் குடும்பத்தை வலைத்து போடும் லட்சுமி மேனன்…

நடிகர்களின் குடும்பத்தை வலைத்து போடும் லட்சுமி மேனன்…

நடிகர்களின் குடும்பத்தை வலைத்து போடும் லட்சுமி மேனன்… post thumbnail image
சென்னை:-பார்ப்பதற்கு தான் பட்டப்படிப்பு முடித்தவர் போல தெரிவார் லட்சுமி மேனன் அவர் ஒன்பதாவது படித்தபோதே கும்கி படத்தில் நாயகியானார். சின்ன பெண்ணாக இருந்தபோதும் அவரது நடிப்பில் மெச்சூரிட்டி இருந்தது. அதனால்தான், அடுத்தடுத்து வெயிட்டான வேடங்களுக்கு அவரை புக் பண்ணினர். ஆக, இப்போது கைநிறைய படங்கள் வைத்துக்கொண்டு இளவட்ட நடிகைகளில் நான்தான் நம்பர்ஒன் என்று சவால் விட்டுக்கொண்டிருக்கிறார்.

அதோடு விமல், சித்தார்த், விஷால் என இரண்டாம் தட்டு ஹீரோக்களுடன் ஜோடி போட்டபடி அடுத்த லெவலுக்கு சென்று கொண்டிருக்கிறார் இவர். முன்பு மாதிரி இல்லாமல் சினிமாவை நன்கு படித்துவிட்ட லட்சுமிமேனன், யாரிடம் எப்படி பேசிப்பழக வேண்டும் என்பதையும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்.அதனால், ஒரு படத்தில் நடித்து முடித்ததும், அப்பட ஹீரோ மற்றும் இயக்குனர், தயாரிப்பாளர்களை அத்தோடு மறந்து விடுவதில்லை. அடிக்கடி போன் போட்டு நலம் விசாரிக்கும் நடிகை, சில சமயங்களில் அவர்களது குடும்பம் வரை சென்று உறவாடி, பழக்கவழக்கத்தை பலப்படுத்துகிறாராம். அப்படி செல்லும்போது, குடும்ப நபர்களிடம் கலகலவென்று பேசிப்பழகி, குடும்பத்தில் ஒருத்தர் போலாகி விடுகிறாராம் நடிகை.

இதனால், சம்பந்தப்பட்டகள் அடுத்தடுத்து படம் பண்ணும்போது, அவர்களது குடும்பத்தைச்சேர்ந்தவர்களே, கதாநாயகிக்கு நம்ம லட்சுமிமேனனையே புக் பண்ணுங்க என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறார்களாம். அதுமட்டுமின்றி, மற்ற நடிகைகளெல்லாம், நடிகர்களுடன் கடலை போடவே தயங்கும் நிலையில், லட்சுமிமேனனோ, அவர்கள் வீட்டில் ஏதேனும் விசேசம் என்றால், பொக்கையுடன் ஆஜராகி விடுகிறார். நடிகர்களின் வீட்டு பெண்களின் சமையலை மூக்கு பிடிக்க ஒரு பிடி பிடித்து விட்டு, இந்த மாதிரி சாப்பாட்டை என் வாழ்நாள்ல நான் சாப்பிட்டதே இல்லை என்று அவர்கள் மனசு குளிரும் வகையில் புகழ் தள்ளுகிறாராம்.நடிகையின் இந்த பேச்சில் மயங்கிப்போகும் நடிகர் வீட்டு தாய்குலங்கள், அதன்பிறகு லட்சுமிமேனனின் அபிமானிகளாகி விடுவதோடு, இந்த மாதிரி நல்ல நடிகைகளுடன் தொடர்ந்து நடிக்குமாறும் தங்களது வீட்டு நடிகரை கேட்டுக்கொள்கிறார்களாம். ஆக, லட்சுமிமேனனுக்கு பல திசைகளில் இருந்தும் இப்போது சிபாரிசுகள் கிடைத்த வண்ணம் உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி