செய்திகள்,திரையுலகம் நடிகர் விஷாலுக்கு மிரட்டல் கடிதம்…

நடிகர் விஷாலுக்கு மிரட்டல் கடிதம்…

நடிகர் விஷாலுக்கு மிரட்டல் கடிதம்… post thumbnail image
ஐதராபாத்:-விஷால், நாசருக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. சிவக்குமார்,சந்தானத் துக்கும் இதுபோல் கடிதங்கள் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர், நடிகைகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நாசர் கூறும் போது,எனக்கு மிரட்டல் கடிதம் வந்து இருக்கிறது. அதை அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. பெயர் முகவரி இல்லாமல் மொட்டை கடிதமாக அதை அனுப்பி வைத்துள்ளனர். கையால் எழுதாமல் டைப் செய்து அனுப்பியுள்ளனர். மோசமான வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்கள். தைரியம் இருந்து இருந்தால் நேரடியாக என்னிடம் மோதி இருக்கலாம்.

சிவக்குமார், விஷால், சந்தானம் போன்றோருக்கும் இது போல் மிரட்டல் விடுத்து மொட்டை கடிதங்கள் வந்திருப்பதாக அறிந்தேன்.இதனை நான் சும்மா விடப்போவது இல்லை. ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருக்கிறேன். சென்னை திரும்பியதும் போலீசில் புகார் அளிப்பது குறித்து முடிவு செய்வேன்.இவ்வாறு நாசர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி