செய்திகள்,விளையாட்டு டென்னிஸ் தரவரிசையில் வாவ்ரின்கா 3வது இடத்துக்கு முன்னேற்றம்…

டென்னிஸ் தரவரிசையில் வாவ்ரின்கா 3வது இடத்துக்கு முன்னேற்றம்…

டென்னிஸ் தரவரிசையில் வாவ்ரின்கா 3வது இடத்துக்கு முன்னேற்றம்… post thumbnail image
மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் நம்பர் 1 வீரர் ரபேல் நடாலை (ஸ்பெயின்) வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா (சுவிஸ்) ஏடிபி தரவரிசையில் 3வது இடத்துக்கு முன்னேறினார்.

நடால் முதல் இடத்தையும், ஜோகோவிச் 2வது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். சாதனை வீரர் ரோஜர் பெடரர் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.ஆஸி. ஓபன் வெற்றி குறித்து வாவ்ரின்கா கூறியதாவது: இந்த வெற்றிக்கு நான் முழு தகுதி உடையவன் என நிச்சயமாக நம்புகிறேன்.கடந்த 2 வாரமாக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆண்கள் டென்னிசில் கடந்த 10 ஆண்டுகளாக பெடரர், நடால், ஜோகோவிச், மர்ரே ஆகிய நான்கு வீரர்கள் மட்டுமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

பெரிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இவர்களை தவிர்த்து மற்ற வீரர்களால் பட்டம் வெல்ல முடிந்ததில்லை. 2009 யுஎஸ் ஓபனில் மட்டும் ஜுவன் மார்டின் டெல் போட்ரோ விதிவிலக்காக பட்டம் வென்றார். மகத்தான வீரர்களான ஜோகோவிச், நடால் இருவரையும் வீழ்த்தி ஆஸி. ஓபன் பட்டத்தை கைப்பற்றியது திருப்தியாக உள்ளது. தொடர்ந்து சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்.இவ்வாறு வாவ்ரின்கா கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி